Tuesday, November 11, 2025

பிரெடரிக் எங்கெல்ஸின் நூல் வெளியீடு

 மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு


பிரெடரிக் எங்கெல்ஸின் The part played by Labor in the Transition from Ape to Man என்ற நூல் தோழர் நிலா விழியனால் மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருவமாறியதில் உழைப்பின் பங்கு என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நூலின் வெளியீட்டு நிகழ்வு சிவகாசி ஆலம் கலை, கல்வி, நாகரிக மையத்தில் நடைபெற்றது. நிகழ்வு சிவகாசி எழுத்தாளர் குழுமத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. 

நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் தோழர் மருத்துவர் த.அறம் அவர்கள் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 



தோழர் ஸ்மைலி செய்யது வரவேற்றார்.


நூலை சிவகாசி எழுத்தாளர் குழுமத்தின் தோழர் மணிமாதவி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

நூல் குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் தோழர் முனைவர் சாந்தி செல்வராஜ் அவர்கள் விரிவாக உரையாற்றினார்.


தொடர்ந்து மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் தோழர் விஜியும் தோழர் கேகேயும் உரையாற்றினர்.


சிவகாசி எழுத்தாளர் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பா. சரவணகாந்த் நூலின் தமிழாக்கம் குறித்து உணர்வுரையாற்றினார்.


நூலின் மொழிபெயர்ப்பாளர் தோழர் நிலா விழியன் ஏற்புரையாற்றினார்.


கதவு பதிப்பகத்தின் தோழர் அஸ்ரஃப்தீன் அவருக்கே உரித்தான தனித்துவ நடையில் நன்றியுரையாற்றினார்.


ஒட்டு மொத்த நிகழ்வையும் சிறிதும் தொய்வின்றி உரையிடையிட்ட சிற்றுரைகளுடன் தோழர் சுதா ஒருங்கிணைத்தார்.

Monday, November 3, 2025

வாய்ப்பிருப்போர் வருக...

 


*தோழர் ஏங்கல்ஸ் ‘Die drel Grandforemen der Knechhishaft - Outline of the General Plan’ (பொதுத்திட்டத்தின் வரைபடம்) என்ற தலைப்பில் ஒரு பெரும்படைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். ‘The Part played by Labour in the Transition from Ape to Man’ என்ற இந்தக் கட்டுரை அந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும் விருப்பத்துடன் எழுதப்பட்டது. அவர் அந்தப் பெரும்படைப்பை எழுதி முடிக்கவில்லை; இறுதியில் தொடர்ச்சியற்று முடிந்து விடுகின்ற இந்த அறிமுகத்தைக்கூட அவர் முடிக்கவில்லை; ஆனால், இன்றளவிலும்கூட தோழர் ஏங்கல்ஸின் மிக முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.*

 *‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு’* என்ற தலைப்பிலான நிலா விழியனின் இந்தப் புதிய தமிழாக்கம் நாம் அந்தப் படைப்பைப் புரிந்துகொள்ள மிகவும் உறுதுணையாக இருக்கும்.

Sunday, October 5, 2025

ஏங்கெல்ஸ் நூல் - முன் வெளியீட்டுத் திட்டம்

           தோழர் ஏங்கல்ஸ் ‘Die drel Grandforemen der Knechhishaft - Outline of the General Plan’ (பொதுத்திட்டத்தின் வரைபடம்) என்ற தலைப்பில் ஒரு பெரும்படைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். ‘The Part played by Labour in the Transition from Ape to Man’ என்ற இந்தக் கட்டுரை அந்தப் படைப்பை அறிமுகப்படுத்தும் விருப்பத்துடன் எழுதப்பட்டது. அவர் அந்தப் பெரும்படைப்பை எழுதி முடிக்கவில்லை; இறுதியில் தொடர்ச்சியற்று முடிந்து விடுகின்ற இந்த அறிமுகத்தைக்கூட அவர் முடிக்கவில்லை; ஆனால், இன்றளவிலும்கூட தோழர் ஏங்கல்ஸின் மிக முக்கியமான படைப்புகளில் இதுவும் ஒன்று.

‘மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக உருமாறியதில் உழைப்பின் பங்கு’ என்ற தலைப்பிலான நிலா விழியனின் இந்தப் புதிய தமிழாக்கம் நாம் அந்தப் படைப்பைப் புரிந்துகொள்ள மிகவும் உறுதுணையாக இருக்கும்.

32 பக்கங்கள் இருக்கக் கூடிய இந்தச் சிறுநூல் நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படுகின்றது. ரூபாய் 30 விலையுள்ள நூல் முன் வெளியீட்டுத் திட்டத்தின்கீழ்…

100 பிரதிகள் வாங்கினால் 30% கழிவுடன் (ரூபாய் 21x100=2100) பதிப்பகத்தின் செலவில் தமிழ்நாட்டிற்குள் மட்டும், உங்கள் முகவரிக்குக் கூரியரில் அனுப்பப்படும்.

50 பிரதிகள் வாங்கினால் 20% கழிவுடன் (ரூபாய் 24x50=1200) பதிப்பகத்தின் செலவில் தமிழ்நாட்டிற்குள் மட்டும், உங்கள் முகவரிக்குக் கூரியரில் அனுப்பப்படும்.

முன் பணம் அனுப்புவதற்கான கடைசி தேதி 2025 அக்டோபர் 25 (25/10/2025)

G-Pay எண் 9443184050

பணம் அனுப்பியதற்கான திரைப்படிமமும் (screen shot) முகவரியும் அதே எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வையுங்கள்.

Saturday, July 26, 2025

பரங்குன்றம் - பண்பாடும் அரசியலும்





          பரங்குன்றம் - பண்பாடும் அரசியலும் நூல் வெளியீட்டு விழா மதுரை MUTA Hall-இல் நடைபெற்றது. PUCL ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் இரா.முரளி நூலை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் த.அறம் நூலை வெளியிட்டு உரை ஆற்றினார். பியுசிஎல் மூத்த உறுப்பினர் நடராசன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், AIPSN இராஜமாணிக்கம், சமூக செயல்பாட்டாளர் தோழர் குமரன், எழுத்தாளர் கோணங்கி, கதவு பதிப்பகம் தோழர் மதிகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாவட்டப் பொருளாளர் பி.கண்மணி நன்றியுரை கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Thursday, January 23, 2025

நூல் விமர்சன அரங்கம்

2025 ஜனவரி 19ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் கதவு பதிப்பகம் நூலங்காடியில் புத்தக விமர்சனக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தேவாங்கர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவுப் பேராசிரியர் திருமிகு சுகன்யா தேவி தலைமை தாங்கினார்.

பகுத்தறிவாளர் கழகத்தின் மானமிகு வெ.முரளி முன்னிலை வகித்தார்.

மாவிபக’வின் தோழர் அஷ்ரஃப்தீன் வந்திருந்தவர்களை வரவேற்றார்.

செழியனின் உலக சினிமா நூலை தோழர் கேகே அறிமுகப்படுத்தினார்.

மதிகண்ணனின் ‘விரிவாக்கப்பகுதி’ கணினி சொன்ன கதைகள் நூல் குறித்து, எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ந.முருகேசபாண்டியன் உரையாடலும் கலந்துரையாடலும் நடத்தினார். அவருடைய உரை வெறுமனே கதைகள் குறித்ததாக மட்டும் இல்லாமல் கதைகள் முன்வைக்கும் கருத்தியல் தொடர்பானதாகவும் இருந்தது மற்றவர்களையும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் செய்தது. கலந்துரையாடலில் மானமிகு விடுதலை ஆதவன், திருமிகு குருசாமி, தோழர் மூர்த்தி, திருமிகு ஜெயராம், தோழர் சு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை செழுமைப்படுத்தினர்.

இந்தக் கதைகளில் கதை சொல்வதைத் தாண்டியும் கதைகளின் பின்னால் இருக்கக்கூடிய கேள்விகள் முக்கியமானதாகப்பட்டதால் கதைகளின் நகர்வே கேள்விகளை மையப்படுத்தியதாகவே இருந்தது என்ற பொருண்மையில் நூலாசிரியர் தோழர் மதிகண்ணன் ஏற்புரை நிகழ்த்தினார்.

25 பேர்வரை கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் நடிப்புச் சுதேசிகளின் பொறுப்பாளர் தோழர் முனியசாமி நன்றி கூறினார்.

Wednesday, January 22, 2025

புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான்.

 


அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும்... வணக்கம்

இந்த வலைப்பூ உங்களுக்குப் புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான்.  சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும்.

கதவு மின்னிதழ் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில் 

கதவு பதிப்பகத்தின் வலைப்பூ இப்போது

இங்கு நூல்கள் தொடர்பானவை மட்டுமன்றி

கலை இலக்கியத்திற்கான தளமாக இதனைப் பயன்படுத்தலாம்.

நண்பர்களும் தோழர்களும் எழுத்தாளர்களும் கதவு பதிப்பகம் வலைப்பூவிற்கு எழுதலாம்.

தங்கள் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

தொடர்வோம் தோழமையுடன்

என்றென்றும் அன்பு

மதிகண்ணன்