தொ. பரமசிவன் நூல்கள்

தொ. பரமசிவன் நூல்கள்
தொ. பரமசிவன் நூல்கள் இன்னும் சில பிரதிகளே உள்ளன

Monday, October 24, 2011

உறுத்தலின்றிக் கழியும் பொழுதுகள் - கேகே



(தோழர் கருப்புவிற்கும்... இயக்குநர் வெங்கட்பிரபுவிற்கும்)

1      சந்தன மணத்தைத் தேடியலைந்த
நேசத்தின் நாற்றத்தை ரூபாய்த்தாளின் வீச்சம்
துடைத்தெடுக்கையில் பார்த்துக் கொண்டு மட்டும்தானிருந்தான்
உங்களைப்போல வெறுமனே.

2.     பறவைகள் விரட்டியடிக்கப்பட்ட ஊரில்
       மரங்கள் வெறுமையாய் நிற்கின்றன.

3.     மானமும் பசியும் பந்தாடப்பட்டபோது
       எழுந்த ஓலங்கள்
       உங்கள் மின்சாதனங்களின் இரைச்சலில்
       அழுகிப் போயின.

4.  *  வயிறு உப்பிய சோமாலியக் குழந்தை
செத்துவிழக் காத்திருக்கிறது கழுகு.

·                                 அறம் தூக்கிலிடப்படும் காலத்தில்
செய்வதறியாது பிதற்றியலையும் அவனை
       ஒன்றுஞ் செய்வதற்கில்லை.

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற விதை)

No comments:

Post a Comment