Saturday, July 26, 2025
பரங்குன்றம் - பண்பாடும் அரசியலும்
Thursday, January 23, 2025
நூல் விமர்சன அரங்கம்
2025 ஜனவரி 19ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியளவில் கதவு பதிப்பகம் நூலங்காடியில் புத்தக விமர்சனக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தேவாங்கர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவுப் பேராசிரியர் திருமிகு சுகன்யா தேவி தலைமை தாங்கினார்.
பகுத்தறிவாளர் கழகத்தின் மானமிகு வெ.முரளி முன்னிலை வகித்தார்.
மாவிபக’வின் தோழர் அஷ்ரஃப்தீன் வந்திருந்தவர்களை வரவேற்றார்.
செழியனின் உலக சினிமா நூலை தோழர் கேகே அறிமுகப்படுத்தினார்.
மதிகண்ணனின் ‘விரிவாக்கப்பகுதி’ கணினி சொன்ன கதைகள் நூல் குறித்து, எழுத்தாளரும் விமர்சகருமான முனைவர் ந.முருகேசபாண்டியன் உரையாடலும் கலந்துரையாடலும் நடத்தினார். அவருடைய உரை வெறுமனே கதைகள் குறித்ததாக மட்டும் இல்லாமல் கதைகள் முன்வைக்கும் கருத்தியல் தொடர்பானதாகவும் இருந்தது மற்றவர்களையும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் செய்தது. கலந்துரையாடலில் மானமிகு விடுதலை ஆதவன், திருமிகு குருசாமி, தோழர் மூர்த்தி, திருமிகு ஜெயராம், தோழர் சு.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை செழுமைப்படுத்தினர்.
இந்தக் கதைகளில் கதை சொல்வதைத் தாண்டியும் கதைகளின் பின்னால் இருக்கக்கூடிய கேள்விகள் முக்கியமானதாகப்பட்டதால் கதைகளின் நகர்வே கேள்விகளை மையப்படுத்தியதாகவே இருந்தது என்ற பொருண்மையில் நூலாசிரியர் தோழர் மதிகண்ணன் ஏற்புரை நிகழ்த்தினார்.
25 பேர்வரை கலந்து கொண்ட கூட்டத்தின் இறுதியில் நடிப்புச் சுதேசிகளின் பொறுப்பாளர் தோழர் முனியசாமி நன்றி கூறினார்.
Wednesday, January 22, 2025
புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான்.
அன்பு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும்... வணக்கம்
இந்த வலைப்பூ உங்களுக்குப் புதியதொன்றுமில்லை 13 வருடப் பழையதுதான். சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும்.
கதவு மின்னிதழ் நிறுத்தப்பட்ட சூழ்நிலையில்
கதவு பதிப்பகத்தின் வலைப்பூ இப்போது
இங்கு நூல்கள் தொடர்பானவை மட்டுமன்றி
கலை இலக்கியத்திற்கான தளமாக இதனைப் பயன்படுத்தலாம்.
நண்பர்களும் தோழர்களும் எழுத்தாளர்களும் கதவு பதிப்பகம் வலைப்பூவிற்கு எழுதலாம்.
தங்கள் நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்வோம் தோழமையுடன்
என்றென்றும் அன்பு
மதிகண்ணன்
Monday, August 16, 2021
கதவு 28 இணைப்புகள்
மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கெதிராகப் போராடவும் அணிதிரளவும் கருத்துகளை வெளிப்படுத்தவும் சிந்திக்கவும்கூடச் சுதந்திரமற்ற சூழ்நிலை இன்றளவும் நிலவுகிறதென்பதை நம்மால் மறுக்க முடியவில்லை. அடக்குதலையும் ஒடுக்குதலையும் எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமற்று மனிதாபிமானமற்ற முறையில் நடைமுறைப்படுத்துவோர் இல்லா நிலையே விடுதலைக்கான அடையாளம்.
https://ekathavu.com/2021/08/editorial_28/
எப்போதெல்லாம் மனம் சோர்வடைந்து, தோல்விகளால் துவண்டு, சமூக நெருக்கடிகளுக்குள்ளாகி ஒடுங்கிப்போகிறோமோ, எப்போதெல்லாம் நம் வாழ்வு முடிந்ததென்று அஞ்சி நடுநடுங்கி நெருப்புக்கோழிகளைப்போல் நம் தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொள்கிறோமோ, அப்போதெல்லாம் ஸ்பார்டகஸ் நம் காதில் நம்பிக்கை ஊற்றெடுக்கும்படி கிசுகிசுக்கிறான்.
“There Is Always A Choice.”
“There Is Always A Choice.”
“There Is Always A Choice.”
https://ekathavu.com/2021/08/sathya_2_28/
பிரெட் சிறை செல்வதை FBI விரும்பவில்லை. சிறை பிரெட்டை இன்னும் பிரபலமாக்கும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறது. அதனால் அவனை கொலை செய்ய முடிவு செய்கிறது. வில்லியம் மூலமாக அவனுக்கு தூக்க மருந்து கொடுத்துவிட்டு தோழர்களுடன் தூங்கும் அவனை சுற்றி வளைத்து சரமாரியாக சுடுகிறது. பிளாக் பேந்தர் தரப்பில் ஒரு தோட்டா சுடப்படுகிறது. FBI தரப்பில் தொண்ணூற்று ஒன்பது தோட்டாக்கள் சுடப்படுகின்றன. அங்கு நடந்ததை ‘துப்பாக்கி சண்டை’ என்று FBI சொல்கிறது.
https://ekathavu.com/2021/08/sathya/
இத்தொகுப்பில் இடம்பெறும் தனிநபர்களின் அனுபவங்கள் நிச்சயம் தனிப்பட்டவை அல்ல. அவர்களைப்போல் பாடுபடும் அனைவரின் வாழ்க்கைநிலையே கதைகளாய் இந்நூலில் நிறைந்துள்ளது. துயரச் சுவை மிகுந்துள்ள தொகுப்பில் சற்றே மாறுதலாய் ஓரிரு கதைகளும் அமைந்துள்ளன… எள்ளலாய் சிற்சில வார்த்தைகளும் ஓரிரு வரிகளும் ஆங்காங்கு தென்படுகின்றன. ஒரு மழை நாளில் கவனத்தை ஈர்க்கும்; வாசித்தால் மனது கனக்கும்.
https://ekathavu.com/2021/08/vijayakumar_28/
சிவப்பு கிளவுஸுடன் தோளில் பாயும் புலி படம் பச்சை குத்தியிருக்கும் வேம்புலியை அதே போல் சிவப்பு கொடியில் பாயும் புலி படத்துடன் வலம்வரும் முக்குலத்தவர்களின் குறியீடாக கொள்ள முடிகிறது. திமுக குறியீட்டுடன் வந்து கடைசியில் கருப்பு பார்டருள்ள நீல அங்கியுடன், “நீதான் நம்ம மக்களுக்காக ஜெயிக்கணும்,” என்றெல்லாம் வசனத்துடன் கிளம்புவது, டான்சிங் ரோஸின் கருப்பு வெள்ளை சிவப்பு நிற ஷார்ட்ஸ் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்திய ரஞ்சித் கொஞ்சம் திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
https://ekathavu.com/2021/08/kaalan_28/
காரெழில் ஈங்கவனின் நவீன சிறுகதை ‘கூற்று’
https://ekathavu.com/2021/08/karazhil-eengavan/
சிதம்பரம் ரவிச்சந்திரனின் மொழிபெயர்ப்புச் சிறுகதை...
https://ekathavu.com/2021/08/chidambaram-ravichendren_28/
கதவில் வீசிக் கொண்டிருக்கும்
கவிஞர் சமயவேலின்
கண்மாய்க்கரை காற்று
https://ekathavu.com/2021/08/samayavel_5_28/
கதவு 28ல் செவல்குளம் செல்வராசின் கவிதைகள்
https://ekathavu.com/2021/08/sevelkulam-selvarasu/
கதவு 28ல் அர்ஜூன் ராச்’சின் கவிதைகள்
https://ekathavu.com/2021/08/arjunraj_28/
கதவு 28ல் பூவன்னா சந்திரசேகரின் கவிதைகள்
https://ekathavu.com/2021/08/poovanna-chendrasekar_28/
கதவு 28ல் சிலம்பரசன் சின்னக்கருப்பனின் கவிதைகள்
https://ekathavu.com/2021/08/silambarasan-chinnakaruppan_28/
கதவு 28ல் சிபி சரவணனின் கவிதைகள்
https://ekathavu.com/2021/08/sibi-saravanan_28/
கதவு 28ல் தமிழ் மணியின் கவிதைகள்
https://ekathavu.com/2021/08/tamilmani_28/
கதவு 28ல் வசந்ததீபனின் ‘சித்திரவதை முகாமிலிருந்து தப்பிப்பதல்ல… நிர்மூமாக்குவதே விடுதலை’ கவிதை
https://ekathavu.com/2021/08/vasantha-dheepan_28/
கதவு 28ல் சி.பிருந்தாவின் ‘விதியின் வழி’ கவிதை
https://ekathavu.com/2021/08/c_brindha_28/
Friday, July 16, 2021
கதவு 27
சத்யா மருதாணி, சிதம்பரம் ரவிச்சந்திரன், புலியூர் முருகேசன்,
சமயவேல், செவல்குளம் செல்வராசு, அட்சயா, மதிகண்ணன்,
சங்கரன், செல்வசங்கரன், அர்ஜூன் ராச், அருண், சிபி கரவணன்
ஆகியோரின் படைப்புகளுடன்
கண்ணன், ஜென்னிமாவின் படங்களுடன் - கதவு 27.
எதிர்வரும் இதழ்களில் உங்களின் பங்களிப்பும் இருக்கட்டும்
Monday, June 14, 2021
கதவு இதழ் எண் 26
தமிழ்மணி நாஞ்சில் எழுத்தாணி
மதிகண்ணன் சமயவேல்
செவல்குளம் செல்வராசு இளங்கோவன்
பெருமாள்
மதுரா பூவன்னா சந்திரசேகர்
அழகுபாண்டி அரசப்பன் க.புனிதன்
ஆகியோரின்
பங்களிப்புடன்
கதவு இதழ் எண் 26
Tuesday, April 20, 2021
கதவு இதழ் எண் 24 (ekathavu.com) ஏப்ரல் 2021
வசந்ததீபன், சமயவேல், அர்ஜூன்ராச்
சிலம்பரசன் சின்னக்கருப்பன்
ஆகியோரின் பங்களிப்புடன்
Monday, March 22, 2021
கதவு இதழ் எண் 23 (ekathavu.com) மார்ச் 2021
கதவு இதழ் எண் 23 - மார்ச் 2021 ekathavu.com
இந்த இதழில்
மதிகண்ணன், சத்யா, சிதம்பரம் ரவிச்சந்திரன்
கா.சி.தமிழ்க்குமரன், சமயவேல், ஆதிரன்
பூவன்னா சந்திரசேகர், சிபி சரவணன்
ஆகியோர் பங்களித்துள்ளனர். வரும் இதழ்களில் உங்களின் பங்களிப்பம் இருக்கும் என நம்புகிறோம்.
படைப்புகளை உள்வாங்கும் மின்னஞ்சல் editorkathavu@gmail.com