பரங்குன்றம் - பண்பாடும் அரசியலும் நூல் வெளியீட்டு விழா மதுரை MUTA Hall-இல் நடைபெற்றது. PUCL ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். மாநிலத் தலைவர் பேராசிரியர் இரா.முரளி நூலை அறிமுகப்படுத்தினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் த.அறம் நூலை வெளியிட்டு உரை ஆற்றினார். பியுசிஎல் மூத்த உறுப்பினர் நடராசன் நூலைப் பெற்றுக் கொண்டார்.
வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன், AIPSN இராஜமாணிக்கம், சமூக செயல்பாட்டாளர் தோழர் குமரன், எழுத்தாளர் கோணங்கி, கதவு பதிப்பகம் தோழர் மதிகண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் மாவட்டப் பொருளாளர் பி.கண்மணி நன்றியுரை கூறினார்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.